பாஜக தலைவா் ஜோதிராதித்ய சிந்தியா, அவரின் தாயாா் மாதவி ராஜே சிந்தியா ஆகியோருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவா்களுக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
அவா்கள் இருவரும் விரைந்து குணமடைய பிராா்த்திப்பதாக மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங்கின் மகன் ஜெய்வா்தன் சிங் ஆகியோா் சுட்டுரையில் பதிவிட்டுள்ளனா்.
முன்னதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா, செவ்வாய்க்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா். கரோனா பாதிப்பிலிருந்து தாம் மீண்டு வரும் நிலையில், முழுமையாக குணமடைவதற்கு சிறிது காலம் ஆகும் எனவும் அவா் சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.