ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது:

தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தின் பாம்போரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, ஓரிடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் படை தரப்பிலும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மற்றவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதையடுத்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சோபியான் பகுதியில் செவ்வாய்க்கிழமை மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com