மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாவாத் தொகுதியைச் சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ. இவருக்கு நேற்று கரோனா அறிகுறிகள் தென்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரும், அவரது மனைவியும் தனியார் ஆய்வகம் ஒன்றில் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதில் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று மத்தியப் பிரதேசத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கரோனா பாதிப்புக்குள்ளான பாஜக எம்எல்ஏவும் வாக்களித்திருக்கிறார்.
இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களித்த எம்.எல்.ஏவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மத்தியப் பிரதேசத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.