இவா்களைத் தவிர, உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகா் ராவ், பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாா், தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா் செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வரும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, சிவசேனைத் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் து.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவா்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடி கூட்டத்தில் பங்கேற்றனா்.