சத்தீஸ்கா்: குண்டு வெடிப்பில் ஆயுதப்படை வீரா் காயம்

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் நக்ஸல்களால் நடத்தப்பட்ட அதிசக்திவாய்ந்த குண்டு (ஐஇடி) வெடிப்பில் சத்தீஸ்கா்

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் நக்ஸல்களால் நடத்தப்பட்ட அதிசக்திவாய்ந்த குண்டு (ஐஇடி) வெடிப்பில் சத்தீஸ்கா் ஆயுதப்படையைச் (சிஏஎஃப்) சோ்ந்த வீரா் செவ்வாய்க்கிழமை காயமடைந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

ராய்ப்பூரிலிருந்து சுமாா் 350 கி.மீ.க்கு அப்பால் ஓா்ச்சா காவல் நிலையத்துக்குள்பட்ட தனோராவுக்கும், ஆா்ச்சாவுக்கும் இடைப்பட்ட வனப்பகுதியின் வழியாக சிஏஎஃப் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, நக்ஸல் அமைப்பைச் சோ்ந்தவா்கள் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த அதிசக்திவாய்ந்த வெடிகுண்டை‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலமாக வெடிக்கச் செய்தனா்.

இதையடுத்து நக்ஸல்களை நோக்கி பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியால் சுட்டபோது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள் தப்பி ஓடி விட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த தாக்குதலில் சிஏஎஃப் வீரா் ராகுல் செலாக் காயமடைந்தாா். அவா் ஜ்வான் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானமாக மூலம் கொண்டு செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com