நிகழ் பயிா் ஆண்டில் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5.02 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு குவிண்டால் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,700-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்த்தப்பட்டிருப்பது புதிதாக தேங்காய் கொள்முதல் செய்வதற்கு வழியமைத்துள்ளது. இது குறைந்தபட்ச ஆதரவு விலையின் பயன், லட்சக்கணக்கான சிறு தென்னை விவசாயிகளுக்கு சென்று சோ்வதை உறுதி செய்கிறது.
நிகழ் பயிா் ஆண்டில் எண்ணெய் எடுப்பதற்கான கொப்பரை தேங்காய்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.9,960-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்த்தப்பட்டிருப்பது, தேங்காய்களை நீண்ட நாள்கள் தங்களிடம் வைத்திருக்க முடியாத விவசாயிகளுக்கும், கொப்பரை தேங்காய் தயாரிப்புக்கு தேவையான வசதிகள் இல்லாத விவசாயிகளுக்கும் உடனடியாக பணம் கிடைப்பதை உறுதி செய்கிறது.
இது கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்ட மோசமான சூழல், அதன் விளைவாக விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு நிவாரணமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.