ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஊரடங்கு காரணமாக ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுரா பகுதியில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே சோபோர் பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.