மும்பை மற்றும் தாராவிப் பகுதியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை:
மும்பையில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,460 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மும்பையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 73,747 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 41 பேர் பலியானதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 4,282 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் அங்கு 27,134 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவிப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,232 ஆக உயர்ந்துள்ளது.