தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,460ஆக பதிவானதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தில்லியின் மொத்த பாதிப்பு 77,240ஆக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 64 போ் உயிரிழந்ததால், பாலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,492ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக 3,947ஆக பதிவானது. இதையடுத்து, நாட்டிலேயே அதிக கரோனா பாதிப்பு எண்ணிக்கைகளைக் கொண்ட நான்கு மாநகரங்களில் மும்பையை பின்னுக்குத் தள்ளி தில்லி புதன்கிழமை முதலிடத்துக்கு வந்தது.