புதுச்சேரி: அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக புதுவை முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதால், மாநில முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு கரோனா சோதனை நடத்தப்படவுள்ளது.
முதல்வர் உட்பட அவரது வீடு, அலுவலகம் ஆகியி இடங்களில் பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டுளது.