மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,493 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு பற்றிய சமீபத்திய அறிவிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 5,493 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 156 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் கடந்த 48 மணி நேரத்தில் பலியானவர்கள் 60 பேர். அதற்கு முன்பாக பலியானவர்கள் 96 பேர்.
இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,64,626 பேர் ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று 2,330 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 86,575 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 70,607 பேர் சிகிச்சையில் உள்ளனர்.