கரோனாவால் பாதிக்கப்பட்ட பி.எஸ்.எப். வீரர்களின் எண்ணிக்கை 1000-ஐத் தாண்டியது!

கடந்த 24 மணி நேரத்தில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மேலும் 53 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த 24 மணி நேரத்தில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மேலும் 53 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மேலும் 53 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்ட வீரர்கள் எண்ணிக்கை 1,018 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 345 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 659 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,66,840-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,890 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822-ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 415 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com