சரத் பவாரின் பாதுகாப்பு வாகனம் சாலையில் கவிழ்ந்தது: காவலர் காயம்

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவாருடன் பாதுகாப்புக்குச் சென்ற வாகனம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காவலர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது
விபத்துக்குள்ளான சரத் பவாரின் பாதுகாப்பு வாகனம்.
விபத்துக்குள்ளான சரத் பவாரின் பாதுகாப்பு வாகனம்.


புணே: தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவாருடன் பாதுகாப்புக்குச் சென்ற வாகனம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காவலர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

சரத் பவார் புணேவில் இருந்து மும்பைக்கு திங்கள்கிழமை காரில் பயணம் மேற்கொண்டார். அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முன்னும் பின்னும் வேறு வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, சரத் பவார் காருக்கு பின்னே வந்து கொண்டிருந்த  காவலர்களின் வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று சாலையில் கவிழ்ந்தது. 

இதையடுத்து, மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் உடனடியாக சென்று அந்த வாகனத்தில் இருந்தவர்களை மீட்டனர். அதில் ஒரு காவலருக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு சக காவலர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். சரத் பவாரும் உடனடியாக காரில் இருந்து இறங்கிச் சென்று காயமடைந்தவருக்கு உரிய உதவிகளை செய்ய உத்தரவிட்டார். காயமடைந்த காவலர் சிறப்பு பாதுகாப்புப் படை பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் இருந்து போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, போக்குவரத்தை சரி செய்து சரத் பவாரின் வாகனத்தை அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான வாகனம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com