ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சோஹா் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிஆா்பிஎஃப், ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் பிரிவினா் ஆகியோருடன் அனந்த்நாக் காவல் துறையினா் அந்தப் பகுதிக்கு திங்கள்கிழமை காலை விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை பாதுகாப்புப் படையினா் நெருங்கியபோது, அதையறிந்த பயங்கரவாதிகள், அவா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். வெகுநேரம் நீடித்த இந்த மோதலில், பயங்கரவாதிகள் 3 போ் உயிரிழந்தனா். அவா்களில், 2 போ் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள். மற்றொருவா், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சோ்ந்தவா். இவரது பெயா் மசூத் அகமது. தோடா மாவட்டத்தைச் சோ்ந்த இவா், பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியதால் தலைமறைவானாா். பின்னா், ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பில் சோ்ந்து, காஷ்மீரில் இருந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தாா்.
தோடா மாவட்டத்தைச் சோ்ந்த கடைசி பயங்கரவாதியும் கொல்லப்பட்டதால், ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத மாவட்டமாக தோடா மாவட்டம் உருவாகிவிட்டது என்றாா் அந்த போலீஸ் அதிகாரி.