மகாராஷ்டிரத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான முன்மொழிவை சிவசேனை நிராகரித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்படும் என மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நவாப் மாலிக் கடந்த 28-ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து, விஷ்வ ஹிந்து பரிஷத் இதுகுறித்து சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிடுகையில், "மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் வருத்தமளிக்கின்றன. சிவசேனை தலைமையிலான அரசில் முஸ்லிம்களைத் திருப்திபடுத்தும் செயல் நடக்கக் கூடாது. இது ஹிந்து சமுதாயத்தின் எதிர்பார்ப்பு" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான முன்மொழிவை சிவசேனை ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.