மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் வகையில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏக்களை விலை பேசி வருவதாக பாஜக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் குர்கானில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று கூறுகையில், எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். கமல்நாத் இன்று போபாலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார். அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.