ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்றுத் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை திருக்குறள் ஒன்றைச் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.
தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது ஆளுநர் தமிழிசை தனது உரையை உறு பசியும் என்று தொடங்கும் திருக்குறளைச் சொல்லி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கமும் அளித்தார்.
தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை, அந்த மாநிலத்தின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அவைத் தலைவர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வணக்கம் என தமிழில் உரையைத் தொடங்கிய தமிழிசை, தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாற்றினார். இடையே,
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
என்ற திருக்குறளைச் சொல்லி, அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தார். அதாவது, ஒரு நாடு என்பது மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வரும் பகை ஆகியவை இல்லாமல் இருப்பது என்பதே அந்த திருக்குறளுக்கான பொருளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் டோக்கன் விநியோகம்!

கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

