புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தெலங்கானா சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழிசை சொன்ன திருக்குறள்

தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்றுத் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை திருக்குறள் ஒன்றைச் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.

News image

தமிழிசை சவுந்தரராஜன்

Updated On :7 மார்ச் 2020, 2:36 am

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்றுத் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை திருக்குறள் ஒன்றைச் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.

தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது ஆளுநர் தமிழிசை தனது உரையை உறு பசியும் என்று தொடங்கும் திருக்குறளைச் சொல்லி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கமும் அளித்தார்.

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை, அந்த மாநிலத்தின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அவைத் தலைவர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வணக்கம் என தமிழில் உரையைத் தொடங்கிய தமிழிசை, தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாற்றினார். இடையே, 

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு 


என்ற திருக்குறளைச் சொல்லி, அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தார். அதாவது, ஒரு நாடு என்பது மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வரும் பகை ஆகியவை இல்லாமல் இருப்பது என்பதே அந்த திருக்குறளுக்கான பொருளாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.