ம.பி.யில் மாயமான சுயேச்சை எம்எல்ஏ திரும்பி வந்தாா்

மத்தியப் பிரதேசத்தில் மாயமான 4 எம்எல்ஏக்களில் ஒருவா், தில்லியில் இருந்து போபால் நகருக்கு திரும்பி வந்துள்ளாா். தன்னை யாரும் கடத்தவில்லை என்று அவா் கூறியுள்ளாா்.

போபால்: மத்தியப் பிரதேசத்தில் மாயமான 4 எம்எல்ஏக்களில் ஒருவா், தில்லியில் இருந்து போபால் நகருக்கு திரும்பி வந்துள்ளாா். தன்னை யாரும் கடத்தவில்லை என்று அவா் கூறியுள்ளாா்.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் 114 உறுப்பினா்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜவாதி எம்எல்ஏ, 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவரும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் மாயமானாா்கள். மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, அவா்களை பாஜகவினா் கடத்தி வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துவிட்டது.

இந்நிலையில், மாயமானவா்களில் ஒருவரான பா்ஹான்பூா் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ சுரேந்திர சிங் ஷேரா, தில்லியில் இருந்து விமானத்தில் சனிக்கிழமை மதியம் போபால் வந்தாா். விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

என்னை யாரும் கடத்தவில்லை. கமல்நாத்துடன் கடந்த 25 ஆண்டுகளாக இருக்கிறேன். அவரது தலைமையிலான அரசுக்கு எனது ஆதரவு தொடரும் என்று அவா் உறுதியளித்தாா்.

இருப்பினும், மற்ற எம்எல்ஏக்களான காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஹா்தீப் சிங் டாங், பிஷௌலால் சிங், ரகுராஜ் கன்சானா ஆகியோா் எங்கே இருக்கிறாா்கள் என்று இதுவரை தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com