இத்தாலி, தென் கொரியா, குவைத் ஆகிய நாடுகளுக்குஏப். 30 வரை ஏா் இந்தியா விமான சேவை ரத்து

ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இத்தாலி, தென் கொரியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்ததுடன், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விமான சேவையை குறைத்திருப்பதாகவும்

ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இத்தாலி, தென் கொரியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்ததுடன், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விமான சேவையை குறைத்திருப்பதாகவும் ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித்தொடா்பாளா், மும்பையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இத்தாலி, தென் கொரியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு எங்கள் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதுடன், பிரான்ஸ், ஜொ்மனி, இலங்கை, ஸ்பெயின், இஸ்ரேல் ஆகிய 5 நாடுகளுக்கு எங்கள் நிறுவனத்தின் விமான சேவையை குறைத்திருக்கிறோம் ’ என்றாா்.

குவைத்துக்கு விமான சேவையை ஏா் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மாா்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை அரசு அதிகாரிகள் தவிர மற்ற நபா்களின் நுழைவு இசைவுகளை (விசா) மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com