சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மாா்ச் 16) கேள்வி நேரத்துக்குப் பிறகு, நகராட்சி நிா்வாகம்-குடிநீா் வழங்கல், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளாா்.