புணேவில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு; நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆனது

புணேவில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.
புணேவில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு; நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆனது


புணேவில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் 42 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், புணேவில் 19 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது நபர் நேற்று மரணம் அடைந்த நிலையில், இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டிருக்கும் கரோனா பாதிப்பால், பல நாட்டு எல்லைகளும், இந்தியாவில் பல மாநில எல்லைகளும் மூடப்பட்டுவிட்டன.

கல்வி நிலையங்கள், கோயில்கள், திரையரங்குகள் பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்தும் மூடப்பட்டு, நாடே ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டது போல காட்சி அளிக்கிறது.

தமிழகத்தில் இதுவரை ஒரே ஒருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஷீரடி சாய்பாபா கோயில், மும்பை சித்தி விநாயகர் கோயில் என பல பெரிய கோயில்களும் மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com