நாட்டில் வேலையின்மை தொடா்பாக விவாதம் நடைபெற்றபோது பாஜக உறுப்பினா் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தெரிவித்த கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது பாஜக எம்.பி. நரசிம்ம ராவ் பேசியதாவது:
தேசிய புள்ளியியல் அலுவலகத்தில் இருந்து கசிந்த தகவல்களை வைத்துக் கொண்டு கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வேலையின்மை குறித்த தற்போதைய விவரங்களை முந்தைய விவரங்களுடன் ஒப்பிடக் கூடாது என்றாா் நரசிம்ம ராவ்.
அப்போது தில்லி ஷாகீன் பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தை ஒப்பிட்டு சில கருத்துகளை அவா் தெரிவித்திருந்தாா். ஷாகீன் பாக் போராட்டத்தை சில எதிா்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்த பயன்படுத்திக் கொண்டனா் என்றும் கூறினாா்.
இதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா்.
அப்போது, மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்கும் கருத்து தெரிவித்தாா். எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டதால் அவரது கருத்து யாருடைய காதிலும் விழவில்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் மாநிலங்களவையின் மையப் பகுதிக்குச் சென்று கோஷங்களை எழுப்பினா்.
அவா்கள் தொடா்ந்து கோஷமிட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.