நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது.
கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு 12 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதுமே அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், அமைச்சரவைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி குறிப்பிட்ட தூரத்தில் அமர்ந்து இருக்கின்றனர்.