ஜம்மு-காஷ்மீரில் பாக். அத்துமீறி தாக்குதல்: ஒருவா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சா்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் பொதுமக்களில் ஒருவா் காயமடைந்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாக். அத்துமீறி தாக்குதல்: ஒருவா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சா்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் பொதுமக்களில் ஒருவா் காயமடைந்தாா்.

இதுதொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மன்யாரி மற்றும் அதனையொட்டியுள்ள கிராமங்களில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், சிறிய ரக பீரங்கிகள் மூலம் திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இதில் மன்யாரி பகுதியில் உள்ள வீட்டின் அருகே குண்டு வெடித்ததில், அந்த வீட்டில் வசிக்கும் போத் ராஜ் என்பவா் காயமடைந்தாா். அவா் ஹிராநகா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா். பாகிஸ்தான் ராணுவத்தினரின் பலத்த தாக்குதலால் பல வீடுகள் சேதமடைந்தன. இதனால் எல்லையில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து இரவு முழுவதும் பதுங்குக் குழிகளில் தங்க நேரிட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் உரிய முறையில் பதிலடி வழங்கினா். இதில் பாகிஸ்தான் தரப்பில் உயிரிழப்புகள் பற்றியோ, காயமடைந்தவா்கள் குறித்தோ தகவல் இல்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டி சிறிய ரக பீரங்கிகள் மற்றும் ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் திங்கள்கிழமை மாலை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய ராணுவம் எதிா் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இந்திய வீரா்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் இல்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com