ஸ்ரீநகர் மருத்துவமனைகளுக்கு ஃபரூக் அப்துல்லா ரூ. 1.5 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ரூ.1.5 கோடி நிதி வழங்கியுள்ளார்.
ஃபரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ரூ.1.5 கோடி நிதி வழங்கியுள்ளார்.

ஸ்ரீநகரில் உள்ள எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனை, சி.டி மருத்துவமனை மற்றும் ஜி.பி. பந்த் மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளுக்கும் இந்த தொகை சமமாகப் பிரித்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஸ்ரீ நகர் தொகுதி மக்களவை எம்.பி.யான அவர், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி கரோனா பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இது ஸ்ரீநகரில் உள்ள மூன்று மருத்துவமனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.25 லட்சம்என வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அனந்த்நாக் தொகுதி எம்.பி ஹஸ்னைன் மசூதி ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com