இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,100 எட்டிவிட்ட நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்ரத்தில் மட்டும் 216 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 80 வயது நபர் இன்று மரணம் அடைந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் மட்டும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கேரளத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா பாதிப்பு
கேரளத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இவர்களில் 17 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், 15 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் பழகியவர்கள். தற்போது கேரளத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.