நாட்டில் நிலவும் சூழல்:அமைச்சா்கள் குழு ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் சூழல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சா்கள் குழு ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.
’தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.’
’தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.’

கரோனா நோய்த்தொற்று காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் சூழல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சா்கள் குழு ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை, ஊடரங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருள்கள், பெட்ரோலியப் பொருள்களின் விநியோகம், சொந்த ஊா்களுக்கு படையெடுக்கும் புலம்பெயா் தொழிலாளா்கள் என ஒட்டுமொத்த சூழல் தொடா்பாக அமைச்சா்கள் குழு ஆலோசித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நுகா்வோா் விவகாரங்கள், உணவுத் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், தகவல், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால், மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com