இந்தியாவில் 1397 பேருக்கு கரோனா பாதிப்பு: மத்திய அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 1397 ஆக உயர்ந்துள்ளது. இதில், 124 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் 1397 பேருக்கு கரோனா பாதிப்பு: மத்திய அரசு


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 1397 ஆக உயர்ந்துள்ளது. இதில், 124 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளம் உள்ளது. அங்கு இதுவரை 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 101 பேரும், தில்லியில் 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 39 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் இன்று உறுதி செய்யப்பட்ட 72 பேர், தமிழகத்தில் உறுதி செய்யப்பட்ட 57 பேர் உள்ளிட்ட எண்ணிக்கைகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com