கேரளத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் பலியாகியுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
கேரளத்தில் இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன் தெரிவித்ததாவது:
"கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கேரளத்தில் இன்று ஒருவர் பலியாகியுள்ளார். அவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். மேலும் 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் காசர்கோட்டைச் சேர்ந்தவர்கள், கொல்லம், திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய பகுதிகளிலிருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கேரளத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 215 ஆக உள்ளது" என்றார்.