ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரோனாவுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேருக்குப் புதிதாக நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக சனிக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோய்த் தொற்றுக்கு ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் ராம்கஞ்சைச் சேர்ந்த 55 வயது முதியவர் உயிரிழந்தார். சண்ட்போலைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஜே.கே.லோன் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
மேலும், ஜோத்பூரில் உள்ள எம்ஜி மருத்துவமனையில் 67 வயது முதியவர் வியாழக்கிழமை இறந்தார் என்று மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய 12 வழக்குகளில், 5 ஜெய்ப்பூரிலிருந்து, ஜோத்பூர் மற்றும் தோல்பூரில் இருந்து தலா இரண்டு மற்றும் அஜ்மீர், சித்தோர்கர் மற்றும் கோட்டாவில் இருந்து தலா ஒன்றும் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 2,678 பேர் கரோனா சாதகமாக உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 65 பேர் இறந்துள்ளனர்.