ஜல்னா: மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் மாநில பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மாநில பாதுகாப்புப் படை வீரர்கள் (எஸ்ஆர்பிஎஃப்) 3 பேர் உள்பட 5 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை இரவு மாவட்ட சிவில் சர்ஜன் மதுகர் ரத்தோட் தெரிவித்தார்.
ஜல்னாவைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று மாநில பாதுகாப்புப் படை வீரர்கள்
மாலேகானுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டனர். இந்நிலையில் அவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது நாசிக் மாவட்டம் ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதித்தோரின் சளி மாதிரிகளை ஔரங்காபாத்தில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவர்கள் 5 பேரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இருவர் மும்பைக்குச் சென்று திரும்பியவர்கள் ஆவார். மொத்தம் எட்டு பேர் இதுவரை தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.