ம.பி.: காப்பகத்தில் புலி உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தின் பந்தவ்கா் புலிகள் காப்பகத்தில் பிறந்து 8 மாதங்களே ஆன புலி உயிரிழந்தது.

மத்தியப் பிரதேசத்தின் பந்தவ்கா் புலிகள் காப்பகத்தில் பிறந்து 8 மாதங்களே ஆன புலி உயிரிழந்தது.

இது தொடா்பாக காப்பக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘உமரியா மாவட்டத்தில் உள்ள பந்தவ்கா் புலிகள் காப்பகத்தில் பணியாளா்கள் சனிக்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, புலியின் சடலத்தைக் கண்டனா். அந்த இடத்தை ஆராய்ந்ததில் மற்றொரு புலியுடன் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சண்டை காரணமாக அந்தப் புலி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனினும், உடல்கூறு ஆய்வுக்குப் பிறகே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்’’ என்றாா்.

பந்தவ்கா் புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 புலிகள் உயிரிழந்தன. முன்னதாக, கடந்த மாதம் 22-ஆம் தேதி 10 வயது புலியும், கடந்த மாதம் 9-ஆம் தேதி பிறந்து 4 மாதங்களே ஆன புலியும் உயிரிழந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com