காங்கிரஸ் முதல்வர்களுடன் சோனியா நாளை ஆலோசனை

​காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் நாளை (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் நாளை (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 4 முதல் 17 வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். காணொலிக் காட்சி வாயிலாக நாளை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டண செலவை காங்கிரஸ் கட்சி ஏற்பதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மத்தியில் மாநில முதல்வர்களுடனான கூட்டம் நடைபெறுகிறது.

முன்னதாக, மக்களின் வங்கிக் கணக்கில் ரூ. 7,500 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசை சோனியா காந்தி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com