நொய்டா சாம்சங் தொழிற்சாலை இன்று 3000 தொழிலாளர்களுடன் இயங்க ஆரம்பித்தது.
ஊரடங்கு காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா சாம்சங் மொபைல் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மத்திய அரசு சில கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவித்துள்ளதன்படி, நொய்டாவில் உள்ள சாம்சங் தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டது. சுமார் 3,000 தொழிலாளர்களுடன் ஆலையில் பணிகள் தொடங்கியுள்ளன.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.