லாரி கவிழ்ந்து விபத்து: 5 போ் பலி

மத்திய பிரதேசத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பயணித்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.

மத்திய பிரதேசத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பயணித்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

ஹைதராபாதில் பணிபுரிந்துவந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 20 போ் உத்தர பிரதேசத்திலுள்ள தங்களது சொந்த ஊரான ஜான்சி மற்றும் எட்டாவாவுக்கு மாம்பழங்களை ஏற்றிச் செல்லும் லாரியில் சென்றுகொண்டிருந்தனா். மத்திய பிரதேசத்தின் பதா கிராமத்தில் சனிக்கிழமை இரவு சாலையில் அந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தொழிலாளா்கள் 5 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 13 போ் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று காவல்துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com