கரோனா: கர்நாடகத்தில் மேலும் 42 பேர்; ஆந்திரத்தில் மேலும் 33 பேருக்கு பாதிப்பு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. 
கரோனா: கர்நாடகத்தில் மேலும் 42 பேர்; ஆந்திரத்தில் மேலும் 33 பேருக்கு பாதிப்பு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. 

ஆந்திரம்

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2,051 ஆக அதிகரித்துள்ளது. கர்னூலில் அதிகபட்சமாக 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கரோனாவுக்கு இதுவரை அங்கு 45 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 1,056 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கர்நாடகம்

கர்நாடகத்தில் இன்று மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 904 ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் கரோனாவுக்கு இதுவரை 31 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 426 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com