கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை அந்தந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில் 47 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 4,035 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 70,756 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா
ஒடிசா மாநிலத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதிய பாதித்தோரில், பாலசூர் (15), கஞ்சம் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டங்களிலிருந்து தலா மூன்றும், பூரி மற்றும் பௌத் ஆகிய இடங்களிலிருந்து தலா ஒன்றும் பதிவாகியுள்ளன.
ஒடிசாவில் தற்போது 349 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 85 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். மூன்று பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.