கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி.. உலகின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளாகிவிட்டது. கரோனா தொற்றில் இருந்து நம்மைக் காக்க உதவும் ஒரு சிறு துளி.
கிருமிநாசினி என்று சொல்லிவிட்டாலே அதை வாங்கிப் பயன்படுத்திவிட்டால் நமது கையில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும் என்று நினைத்தால் அது தவறு.
அதாவது, கிருமிநாசினியை வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் நிச்சயம் சில விஷயங்களை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.
முதலில் எந்த கிருமி நாசினியை வாங்க வேண்டும்?
எப்படி பயன்படுத்த வேண்டும்?
கிருமிநாசினியை விட மிகச் சிறந்த உபாயம் என்னவென்றால் சோப்புப் போட்டு தண்ணீரைக் கொண்டு கையைக் கழுவுவதுதான். அந்த வாய்ப்பு இல்லாத பட்சத்தில் கிருமிநாசினையைப் பயன்படுத்தலாம்.