கேரளத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
கேரளத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 576 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 16 பேரில், வயநாட்டில் 5 பேர், மலப்புரத்தில் 4 பேர், ஆலப்புழாவில் இருவர், கொல்லம்- பாலக்காட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 493 பேர் குணமடைந்த நிலையில் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர் என்று தெரிவித்தார்.