அசாமில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு? - மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

அசாமில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீடிக்க மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் கடிதம் எழுதியுள்ளார். 
அசாமில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு? - மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

அசாமில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீடிக்க மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் கடிதம் எழுதியுள்ளார். 

நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. வருகிற மே 17 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு இருக்கும் என்றும் இது முன்னதை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். மே 18 ஆம் தேதிக்கு முன்னதாக நான்காம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அசாமில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீடிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் கடிதம் எழுதியுள்ளார். 

அசாமில் இதுவரை 87 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com