தலைநகர் தில்லியில் புதிதாக 425 பேருக்கு கரோனா தொற்று

தலைநகர் தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தலைநகர் தில்லியில் புதிதாக 425 பேருக்கு கரோனா தொற்று

தலைநகர் தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81,970 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில் தலைநகர் தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,895ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 5,254 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

3,518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 123 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் தில்லியில் கரோனாவுக்கு இன்று எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com