யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார்மயமாக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
'சுயசார்பு இந்தியா' திட்டம் பற்றிய 4-ம் கட்ட விளக்கத்தை நிர்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) புது தில்லியில் எடுத்துரைத்தார். அப்போது யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் பற்றி அவர் அறிவிக்கையில்,
"யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம், மின் சக்தித் துறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் தனியார்மயமாக்கப்படும். இதன்மூலம், நுகர்வோருக்கான மின் விநியோக சேவை மேம்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது." என்றார்.