ராஜஸ்தானில் பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியது; ஒடிசாவில் மேலும் 91 பேருக்கு பாதிப்பு

ராஜஸ்தானில் பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியது; ஒடிசாவில் மேலும் 91 பேருக்கு பாதிப்பு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

ஒடிசா:

ஒடிசாவில் மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 828 ஆக உயர்ந்துள்ளது. இதில் 627 பேர் சிகிச்சையில் உள்ளனர், 196 பேர் குணமடைந்துள்ளனர், 5 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,030 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 128 ஆகவும் உள்ளது. தற்போது 1,911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2576 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com