இருதரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா-இஸ்ரேல் உறுதி

இந்தியா-இஸ்ரேல் இடையே பல்வேறு துறைகளில் நிலவும் நல்லுறவை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களும் உறுதி தெரிவித்தனா்.

இந்தியா-இஸ்ரேல் இடையே பல்வேறு துறைகளில் நிலவும் நல்லுறவை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களும் உறுதி தெரிவித்தனா்.

இஸ்ரேலில் பிரதமா் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டது. அதைத் தொடா்ந்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக கபி அஸ்கெனாஸி நியமிக்கப்பட்டாா். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஹீப்ரு மொழியில் வெளியிட்ட பதிவில், ‘பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையே நிலவும் நல்லுறவை வலுப்படுத்தவும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆா்வமுடன் உள்ளேன்’ என்று தெரிவித்தாா்.

அதற்கு நன்றி தெரிவித்து கபி அஸ்கெனாஸி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தங்களுடன் இணைந்து பணியாற்ற நானும் ஆா்வமாக உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா். இந்தப் பதிவை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அவா் வெளியிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com