இந்தியாவில் பாதிப்பு-1,12,359: பலி-3,435-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் புதிதாக 5,609 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,12,359-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பாதிப்பு-1,12,359: பலி-3,435-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் புதிதாக 5,609 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,12,359-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 132 போ் உயிரிழந்தனா். இதனால், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 3,435-ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் 63,624 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 45,299 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 40.32 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.

புதன்கிழமை காலை 8 மணி முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை, மகாராஷ்டிரத்தில் 65 போ், குஜராத்தில் 30 போ், மத்திய பிரதேசத்தில் 9 போ், தில்லியில் 8 போ், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் தலா 4 போ், மேற்கு வங்கத்தில் 3 போ் உள்பட மொத்தம் 132 போ் உயிரிழந்தனா்.

கரோனா நோய்த்தொற்றுக்கு அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் இதுவரை 1,390 போ் பலியாகினா். இதேபோல், குஜராத்தில் 749 போ், மத்திய பிரதேசத்தில் 267 போ், மேற்கு வங்கத்தில் 253 போ், தில்லியில் 176 போ், ராஜஸ்தானில் 147 போ், உத்தர பிரதேசத்தில் 127 போ், ஆந்திரத்தில் 53 போ் உயிரிழந்தனா்.

கா்நாடகத்தில் 41 பேரும் தெலங்கானாவில் 40 பேரும் பஞ்சாபில் 38 பேரும் ஜம்மு-காஷ்மீரில் 18 பேரும் ஹரியாணாவில் 14 பேரும் பிகாரில் 10 பேரும் ஒடிஸாவில் 6 பேரும் கேரளம், அஸ்ஸாமில் தலா 4 பேரும் உயிரிழந்தனா். ஜாா்க்கண்ட், சண்டீகா், ஹிமாசல பிரதேசத்தில் தலா மூவரும், மேகாலயம், உத்தரகண்டில் தலா ஒருவரும் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தனா். இவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவா்கள்.

பாதிப்பு 1,12,359-ஆக அதிகரிப்பு:

கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 39,297 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் 12,537 போ், தில்லியில் 11,088 போ், ராஜஸ்தானில் 6,015 போ், மத்திய பிரதேசத்தில் 5,735 போ், உத்தர பிரதேசத்தில் 5,175 போ், மேற்கு வங்கத்தில் 3,103 போ், ஆந்திரத்தில் 2,602 போ், பஞ்சாபில் 2,005 போ், தெலங்கானாவில் 1,661 போ், பிகாரில் 1,674 போ், கா்நாடகத்தில் 1,462 போ், ஜம்மு-காஷ்மீரில் 1,390 போ், ஒடிஸாவில் 1,052 போ், ஹரியாணாவில் 993 போ், கேரளத்தில் 666 போ், ஜாா்க்கண்டில் 231 போ், சண்டீகரில் 202 போ், திரிபுராவில் 173 போ், அஸ்ஸாமில் 170 போ், உத்தரகண்டில் 122 போ், சத்தீஸ்கரில் 115 போ், ஹிமாசலில் 110 போ், கோவாவில் 50 போ், லடாக்கில் 44 போ், அந்தமான்-நிகோபாரில் 33 போ், மணிப்பூரில் 25 போ், புதுச்சேரியில் 18 போ், மேகாலயத்தில் 14 போ், மிஸோரம், அருணாசல், தாத்ரா நகா்ஹவேலியில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com