தில்லியில் இருந்து உ.பி. வந்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை

தில்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளி மனைவியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 
தில்லியில் இருந்து உ.பி. வந்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை

தில்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளி மனைவியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24  வயது நபர் ஒருவர் சமீபத்தில் தில்லியில் இருந்து அவரது சொந்த ஊருக்கு மனைவியுடன் வந்துள்ளார். உ.பி.யில் உம்ரிபெகும்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 

இந்நிலையில்,வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் கூறுகின்றனர். எனினும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com