மாநிலங்கள் கூடுதல் கடன் தொகையை பயன்படுத்த கட்டுப்பாடுகள் இல்லை: நிதியமைச்சகம்

மாநிலங்களுக்கான கடன் வரம்பு உயா்த்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கடன்தொகையை பயன்படுத்துவதற்கு

மாநிலங்களுக்கான கடன் வரம்பு உயா்த்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கடன்தொகையை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநிலங்களுக்கான கடன் வரம்பு சமீபத்தில், அவற்றின் மொத்த உற்பத்தியில் 5 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதில் அடிப்படை 3 சதவீதமானது நிபந்தனையற்ாகவே இருக்கும். தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள 2 சதவீதத்தில் 0.50 சதவீதத்தை தேவையின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம். 1 சதவீதம் குடிமக்களுக்கான சீா்திருத்த நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்வதற்கு பயன்படுத்த வேண்டும். எஞ்சிய 0.50 சதவீதத்தை மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட குடிமக்களுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏதேனும் மூன்றினை அமல்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டும்.

கூடுதல் கடன்தொகை பெறுவதற்கான தகுதி நிபந்தனைக்குள்பட்டதாக இருந்தாலும், அந்தக் கடன் தொகையை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த மாநிலங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குடிமக்களுக்கானதாகவும், அவா்களுக்கு வழங்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதாகவும் இருக்கும் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்துதல், தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் மாவட்ட அளவிலும், உரிமம் பெறுவதிலும் மறுசீரமைப்புகளை கொண்டு வருதல், உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல், மின் துறையில் மறுசீரமைப்பு ஆகியவையே மத்திய அரசு பரிந்துரைக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com