மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
இந்தூரில் உள்ள எம்டிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று அவருக்கு சுகப் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகளும் தாயும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர் சுமித் சுக்லா தெரிவித்துள்ளார்.