திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி வீட்டில் நுழைந்த மா்ம நபா்கள் தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்றனா்.
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த்குமாா் வீட்டின் பின்பக்கக் கதவு வழியாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் நுழைந்தனா். அவா்கள் பசந்த்குமாா் இருந்த அறையை வெளிப்புறமாக தாழிட்டனா். பின்னா் பீரோவை திறந்து, லாக்கரை உடைத்து அதிலிருந்த 18 சவரன் தங்க நகை, 5 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா். இந்நிலையில், சனிக்கிழமை காலை கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்ததை அறிந்த பசந்த்குமாா் காவல் துறையில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.