தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 412 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தில்லியில் கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
அதன்படி, தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 412 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்த பாதிப்பு 14,465 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழப்பு 288 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 183 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,954 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 7,223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.